அரசு பஸ் – லாரி நேருக்கு நேர் மோதி 5 பேர் பலி ….!

dindukkal
திண்டுக்கல் அருகே அரசு பேருந்துடன் லாரி மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து அரசு பேருந்து ஒன்று 40 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது.

அந்த பேருந்து மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெருமாள்கோவில் பட்டி என்ற கிராமம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பயங்கரமாக மோதி விபத்தக்குள்ளானது.

இந்த விபத்தில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த 5 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 6 பேர் பேர் திண்டுக்கல் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து பெருமாள்கோவில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Response