சினிமா கலைஞர்களுக்கு தங்க காசுகள் கொடுத்த விஜய் சேதுபதி!…

vijay sedhupathi
இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் ‘உலகாயுதா’ என்ற அமைப்பின் சார்பில் நடந்த தமிழ்தேசிய சலனபடத்தின் 100வது ஆண்டு விழாவில் திரைத்துறையை சேர்ந்த 100 கலைஞர்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி தனது சொந்த செலவில் தலா 1 பவுன் தங்க நாணயம் வழங்கினார்.

விழாவில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பேசுகையில், ‘’தமிழின் முதல் சலனப் படமாக ‘கீசக வதம்’ 1916-ல் வெளியானது. கடந்த ஆண்டோடு முதல் சலனப் படம் எடுக்கப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவடைந்தது. இதை முன்னிட்டு விழா எடுக்க வேண்டும் என்று பேசிக் கொண்டு இருந்தோம். அப்போது, கலைஞர்களுக்கு, தங்கப் பதக்கங்கள் வழங்கலாம் என முடிவு செய்தோம். நடிகர் விஜய்சேதுபதி முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். இது கலைஞனை கவுரவிக்கும் செயல்” என்றார்.

இயக்குநரும், நடிகருமான கரு.பழனியப்பன் வரவேற்று பேசினார். விஜய் சேதுபதியை நடிகராக சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் சீனு ராமசாமிக்கு முதல் பதக்கம் வழங்கப்பட்டது. மொத்தம் 100 கலைஞர்களுக்கு இந்தப் பதக்கம் வழங்கப்பட்டது. விஜய் சேதுபதி தனது சொந்த செலவில் வழங்கினார். விஜய்சேதுபதியின் தாயார் தங்க பதக்கம் வழங்கி தொடங்கிவைத்தார்.

விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, ”நான் நடிகராக அறிமுகமான போது, எனக்கு வழங்கப்பட்ட மரியாதை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்த செயல் மூலம் எனக்கு மன நிறைவு ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

Leave a Response