ஆந்திராவில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது!..

kanchaa
ஆந்திராவில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவரை மைலர்தேவப்பள்ளி காவல் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுபான் காலனியில் நடத்திய அதிரடி சோதனையில், ஒரு வீட்டில் இருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ராஜ்குமார் என்பவர் வீட்டில் கஞ்சா வளர்த்ததால் கைது செய்யப்பட்டதாக இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வர் தெரிவித்துள்ளார். திடீர் சோதனையின்போது, ராஜ்குமார் வீட்டில் வளர்க்கப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்துக் கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

போதை மருந்து ஒழிப்பு சட்டப் பிரிவின் கீழ் கைதாகியுள்ள ராஜ்குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இவர் வங்கியில் கொள்ளையடித்தக் குற்றத்திற்காக ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Leave a Response