மீண்டும் சரத்குமார் நடிப்பில் வெளியாகும் ‘சென்னையில் ஒரு நாள் -2’…

chennai 1
சென்னையில் ஒரு நாள் 2013ஆம் ஆண்டில் சகீத் காதர் இயக்கத்தில் உடன்பிறப்புக்களான பாபியும் சஞ்சயும் எழுதிய தமிழ் திகில் படமாகும். 2011ம் ஆண்டின் மலையாளத் திரைப்படமான டிராபிக்கின் மறுபதிப்பான இதனை இராதிகா சரத்குமாரும் லிஸ்டின் ஸ்டீபனும் தயாரித்து சன் பிக்ச்சர்
நிறுவனத்தின் மூலம் வெளியிட்டது. இதில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், சேரன், பிரசன்னா, ராதிகா சரத்குமார், பார்வதி மேனன் மற்றும் இனியா நடித்தநற். இத்திரைப்படத்தின் திரைக்கதை மீயுரை வடிவத்தில் அமைந்தது. ஒரு நிகழ்வை ஒட்டி பல கதைகள் பிணையப்பட்டுள்ளன. சென்னையில் நிகழ்ந்த ஓர் உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு கதை புனையப்பட்டது. இதற்கு முன்னதாக நான்கு வழிச் சாலை எனப் பெயரிடப்பட்டிருந்தது. இத்திரைப்படம் மார்ச்சு 29, 2013 அன்று வெளியானது.

மேலும் இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், சேரன், பிரசன்னா, ராதிகா சரத்குமார், பார்வதி, மேனன், இனியா, மித்துன், சச்சின், ஐசுவர்யா தேவன், வைசாலி, காப்ரீயல்லா சார்ல்டன்
லட்சுமி இராமகிருஷ்ணன், மற்றும் பலர் நடித்து பெரியளவில் மக்கள் மனதில் பதிந்தது.

அதேபோல் தற்போது கல்பதரு பிக்சர்ஸ் என்ற புதிய பட நிறுவனத்தின் தயாரிக்கும் படத்திலும் சரத்குமார் கதாநாயகனாக நடிக்கிறார்.

சரத்குமார் நடித்த வெற்றிப்படமான சென்னையில் ஒரு நாள் படத்தைப் போன்று பரபரப்பான த்ரில்லர் படம் என்பதால் இந்த படத்துக்கு ‘சென்னையில் ஒரு நாள் -2’ என்று பெயரிடப்பட்டுள்ளது.பிரபல க்ரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதிய ஒரு த்ரில்லர் கதையை தழுவி இப்படம் எடுக்கப்படுகிறது. ராஜேஷ்குமார் எழுதிய கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குற்றம்-23 படம் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.
ராம் மோகன் தயாரிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குனர் ஜெபிஆர் இயக்குகிறார். தீபக் ஒளிப்பதிவாளராகவும் ‘மாயா’ புகழ் ராண் இசையமைப்பாளராகவும், சோலை அன்பு கலை இயக்குனராகவும் பணியாற்றுகின்றனர். முனீஸ்காந்த், அஞ்சனா ப்ரேம், ராஜசிம்ஹன் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். நிசப்தம் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் சாதன்யாவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
‘சென்னையில் ஒரு நாள் -2’ படத்தில் சரத்குமாரின் கதாபாத்திரம் ‘under cover agent’ என்றும், அவர் புலன் விசாரணை செய்யும்முறை பரபரப்பாகஇருக்கும் என்றும் சொல்கிறார் இயக்குநர் ஜெபிஆர். “இந்த திரைப்படம் அனைவருக்கும் ஒரு திருப்பு முனையாக அமையும்” என்றும் சொல்கிறார். இப்படத்தின் பூஜை நேற்று கோவையில் நடைபெற்றது. ‘சென்னையில் ஒரு நாள் -2’ படத்தின் படப்பிடிப்பு கோவையில் தொடங்கி தொடர்ந்து 30 நாட்கள் நடைபெறுகிறது.

Leave a Response