திடீர் மாரடைப்பால் மரணமடைந்த சசிகலாவின் அண்ணன் மகன்!..

sasi annan magan
அதிமுக பொதுச் செயலாளராக திகழும் சசிகலாவின் இரண்டாவது அண்ணன் வினோதகனின் மகன் மகாதேவன்(47). அவர் தஞ்சையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் திருவிடைமருதூரில் உள்ள கோவிலுக்கு காரில் சென்றுள்ளார். அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதைக் கண்ட அவரது உறவினர்கள் கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மகாதேவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இதனைத் தொடர்ந்து அவரது உடல் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செல்கிறார். மாரடப்பால் உயிரிழந்த மகாதேவன், ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response