சிவலிங்கா- விமர்சனம்

raghava-lawrence
படம்- சிவலிங்கா

படம் வகை- காதல், ஹர்ரர், நகைச்சுவை,

இயக்கம்- P.வசு, இசை: எஸ்.எஸ். தமன்,

நடிகர்கள் : ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், சக்தி, வடிவேலு, ராதாரவி, பானுபிரியா, ஊர்வசி, மதுவந்தி அருண், ஜெயபிரகாஷ், பிரதீப் ராவத்,

இயக்குனர் பி.வாசு இயக்கதில் உருவான சிவலிங்கா படத்தில் ஓடும் ரயிலிலிருந்து ரஹீம் என்ற இளைஞன் கீழே தள்ளிவிடப்பட்டு கொல்லப்படுகிறார். இந்த விவகாரத்தை தற்கொலை என நீதிமன்றம் முடிவுகட்டிவிட்டாலும், இந்த வழக்கு மீண்டும் திறக்கப்பட்டு சிபிசிஐடி அதிகாரியான சிவலிங்கா வசம் ஒப்படைக்கப்படுகிறது. இதற்கிடையில் கொல்லப்பட்ட ரஹீமின் ஆவி, சிவலிங்காவின் மனைவியின் மேல் புகுந்து, கொலையாளியைக் கண்டுபிடிக்க நெருக்கடி கொடுக்கிறது. மனைவியையும் காப்பாற்றி, கொலையாளியையும் எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பதுதான் சிவலிங்காவின் க்ளைமாக்ஸ்.

படம் நெடுக துறுதுறுப்பாக வலம்வரும் ராகவா லாரன்ஸ், படத்தின் மிகப் பெரிய பலம். ரஜினி கட் – அவுட் பின்னணியில் ‘சின்ன கபாலி’ என்று தானே சொல்லிக்கொண்டாலும் படத்தில் தென்படும் உற்சாகத்திற்கு இவரே காரணம்.
பேய் பிடித்து ஆட்டும் மனைவியாக வரும் ரித்திகா சிங், பல காட்சிகளில் அனைவரையும் அதிரவைத்திருகிறார். பின்னர் நீண்டநாட்களுக்கு பிறகு வைகை புயல் வடிவேலு இதில் படமுழுக்க வர வில்லை என்றாலும் தனக்கு கொடுத்த கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.

இப்படத்தின் ஆவியாக நடித்திருக்கும் ரஹீம் வேற யாரும் இல்ல நம்ம சின்னதம்பி சக்திதான் இவர்தான் கன்னட சிவலிங்க படத்திலும் ரஹீமாக நடித்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் பேய் அலை சற்றே ஓய்ந்தாலும், மீண்டும் ஆவேசமாக அடிக்க ஆரம்பித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இரு வாரங்களுக்கு முன்பாக நயன்தாரா நடித்த டோரா. இப்போது சிவலிங்கா.

சிவலிங்கா பேய்ப் படம் என்றாலும் திகில் படம் அல்ல. ஹீரோயிசம், பாடல்கள், சண்டைகள், காமெடி என எல்லாம் கலந்த ஒரு மசாலாப் படத்தையே கொடுக்க முயற்சித்திருக்கிறார் பி. வாசு. ஆனால், 80களில் வந்த மசாலாப் படம் போல இருக்கிறது.

எம்.ஜி.ஆர். படங்களில், தான் ஒரு காவல்துறை அதிகாரி என்பதையே சொல்லாமல் திருமணம் செய்துகொள்வதைப் போல ராகவா லாரன்ஸும் இந்தப் படத்தில் நாயகியை திருமணம் செய்துகொள்கிறார். படத்தில் வரும் காவல்துறை அலுவலகங்கள் எல்லாம் தகவல்தொழில்நுட்பத் துறை அலுவலகங்களைப் போல பிரகாசிக்கின்றன.

ஏற்கனவே வெற்றி பெற்ற படத்தின் ரீ-மேக் என்பதாலோ என்னவோ திரைக்கதையில் இயக்குனர் பெரிதாக மெனக்கெடவில்லை. பல காட்சிகள் துண்டுதுண்டாக நிற்கின்றன. படத்தின் கடைசி அரை மணி நேரத்தில் உண்மையான குற்றவாளியை சிவலிங்கா அடையாளம் காட்டும்போது பல்வேறு புள்ளிகளை இணைத்து, குற்றவாளியை அடையாளம் காட்டுகிறார். ஆனால், அவர் எப்படி இந்த குற்றத்தை செய்தார்கள் என்பதை கண்டுபிடித்தார் என்பது போகிறபோக்கில் சொல்லப்படுகிறது இந்த சிவலிங்கா.

மொத்ததில் சிவலிங்கா ஒரு சந்திரமுகி பார்ட் 2 இப்படத்தினை அனைவரும் திரையரங்குகளில் சென்று பாருங்கள்.

Leave a Response