நடிகை மடோனா செபாஸ்டியன் ரசிகர்களிடம் வேண்டுகோள்..!

madona
தன் பெயரில் செயல்படும் போலி சமூக வலைத்தள கணக்குகளை பின்பற்ற வேண்டாம் என நடிகை மடோனா செபாஸ்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரேமம் படத்தில் நடித்து கேரள ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட மடோனா செபாஸ்டியன், தற்போது தமிழ் திரையுலகிலும் ஒரு ரவுண்ட் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் இவர் நடித்த காதலும் கடந்து போகும், கவன், ப.பாண்டி ஆகிய படங்களில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது மட்டுமின்றி, மடோனா செபாஸ்டியனின் நடிப்பும் பாராட்டப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் புதிதாக தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தை நடிகை மடோனா செபாஸ்டியன் துவங்கியுள்ளார். “@MadonnaSebast14” என்ற பெயரில் டிவிட்டர் பக்கத்தை துவங்கியுள்ள அவர், “என் பெயரில் செயல்படும், போலி கணக்குகளை யாரும் பின்பற்ற வேண்டாம். இதுதான் என்னுடைய முதல் டிவீட்.” என மடோனா தெரிவித்துள்ளார்.

Leave a Response