டெல்லியில் போராடும் விவசாயிகள் திருவோடு ஏந்தி நூதன முறையில் போராட்டம்!..

thiruodu
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தில் கீழப்பாவூர் வட்டார விவசாய பொதுமக்கள் சார்பில், அரசுடைமை பெற்ற வங்கிகளில் உள்ள விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய கோரி, விவசாயிகள் கையில் திருவோடு ஏந்தி நூதன முறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். டெல்லியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

26 நாட்களாக போராட்டம் நடத்தியும், அரசு தங்களைக் கண்டு கொள்ளவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.

Leave a Response