நாளை மாலையுடன் ஓய்கிறது ஆர்.கே நகர் பிரச்சாரம்!..

R.k nagar
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இதனால் ஆர்.கே.நகரில் இறுதிக்கட்ட பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏப்ரல் 12 ம் தேதி நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் ஓய்கிறது. நாளை மாலை 5 மணிக்கு மேல் தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் ஆகியவற்றை நடத்தவோ, அதில் பங்கேற்கவோ கூடாது என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஆர்.கே.நகரில் வாக்காளர் அல்லாதோர் நாளை மாலை 5 மணிக்கு மேல் தொகுதியில் இருக்கக் கூடாது எனவும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Leave a Response