தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவால் 22 போலீஸ் அதிகாரிகள் ஆர்.கே. நகரில் மாற்றம்!..

Rk-
ஆர்.கே.நகர் தொகுதிக்கு எப்ரல் 12-ல் இடைத்தேர்தல் நடைப்பெற இருக்கிறது. இந்த தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவதாக தொடர்ந்து குற்றசாட்டுகள் எழுந்தது. இதனையடுத்து அந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உட்பட 22 போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டுள்ளார்.

வடசென்னை சட்டம் – ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையராக இருந்த எம்.சி.சாரங்கன் ஐ.பி.எஸ்-க்கு பதிலாக ஜெயராம் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல், வடசென்னை இணை ஆணையராக பாஸ்கரன் ஐ.பி.எஸ்சும், வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக ஷாசாங்சாயும் நியமிக்கப்பட்டுள்ளனர். புளியந்தோப்பு துணை ஆணையராக ராமர், வண்ணாரப்பேட்டை உதவி ஆணையராக அர்னால்டு ஈஸ்டர் மற்றும் எம்.கே.பி.நகர் உதவி ஆணையராக அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதே போல மேலும் சில அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

Leave a Response