சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி இன்று பதவியேற்றார்….

governor
சென்னை ஐகோர்ட் நீதிபதியாக இருந்த எஸ்.கே.கவுல், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி உயர்வு பெற்று சென்றார். இதையடுத்து, பொறுப்பு தலைமை நீதிபதியாக, எச்.ஜி.ரமேஷ் செயல்பட்டு வந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டிற்கு புதிய தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி இன்று பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். சென்னை ராஜ்பவனில் நடந்த இவ்விழாவில், மூத்த வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் புதிதாக சென்னை ஐகோர்ட் தலைமை நீதி பதியாக பதவியேற்ற இந்திரா பானர்ஜி மேற்குவங்க மாநிலம், கோல்கட்டாவைச் சேர்ந்தவர். 1957 ம் ஆண்டு பிறந்த இவர், 1985 ம் ஆண்டு ஜூலை மாதம் வழக்கறிஞர் தொழிலை துவங்கினார். 2002ம் ஆண்டு கோல்கட்டா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், பின்னர் டில்லி ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றி உள்ளார்.

Leave a Response