ஆ.தி.மு.க. அம்மா அணியினர் தாக்கியதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்…

panam
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அதனையடுத்து, அவரது தொகுதியான ஆர்கே நகர் தொகுதி காலியானது. தொடர்ந்து, ஆர்கே நகர் தொகுதிக்கு வருகிற ஏப்ரல் மாதம் 12-ம் தேதியன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல முனைப் போட்டிகள் நிலவி வரும் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் எப்படியேனும் வெற்றி பெற்று விட வேண்டும் என்ற முனைப்பில் அரசியல் கட்சிகள் உள்ளதால், அங்கு பணப்பட்டுவாடாக்களும் குறைவின்றி நடந்து வருகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தாலும், எந்த பயனும் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட ஜெ.ஜெ.நகர் பகுதியில், அதிமுக அம்மா அணியினர் பணப்பட்டுவாடா செய்ய முயன்ற போது, அதனை தடுத்த பொதுமக்களை அவர்கள் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து, அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வண்ணாரப்பேட்டை காவல் நிலையம் உள்ள சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Leave a Response