17 வயது சிறுமியை கடத்தி 5 மாதங்கள் பாலியல் வன்கொடுமை செய்த 5 பேர் கைது!

download (2)
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவள் 17 வயது சிறுமி. அவள் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த போது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திடீரென காணாமல் போனார். இதையடுத்து அவளது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம், சிறுமியை கடத்தியவர்களின் உறவினர்கள் உதவியுடன் தப்பி வந்துள்ளார். தனது பெற்றோருடன் சேர்ந்த அவள், தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறியுள்ளார். தான் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்ததால், அவர்கள் மீண்டும் காவல்துறையை அணுகினர்.

அவர்களுக்கு சமூக ஆர்வலர் முகமது கலீம் துணை நின்றுள்ளார். அதனால் அந்த வழக்கு ஜலந்தர் மூத்த காவல்துறை அதிகாரி ஜி.எஸ்.புல்லரிடம் கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக குற்றம்சாட்டப்பட்ட 5 பேர் மீது கொலை மற்றும் ஆட்கடத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். குற்றவாளிகள் சிறுமி பணிபுரிந்த தொழிற்சாலையில் பணிபுரிந்து, தற்போது தலைமறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் உரிய நடவடிக்கை காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து புல்லர் உத்தரவிட்டார். தொடர்ந்து 5 பேரையும் கைது செய்ய, காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

Leave a Response