சூடுபிடித்துள்ள ஹெல்மட் வியாபாரம் மதுரை!..

4
மதுரையில் இன்று (ஏப்ரல் 1) முதல் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் அனைவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் எனகாவல்துறை ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் இரண்டு நாட்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை 6 மணி முதல் மதுரை முழுவதும் பல்வேறு இடங்களில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெட்மெட் அணியாமல் வந்தவர்களை நிறுத்தி அபராதம் விதித்தனர்.

மேலும் மதுரை மற்றும் அதன் சுற்றுபுரப்பகுதிகலான 50 திற்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் இதுவரை 100 ருக்கும் மேற்பட்ட இருச்சக்கர வாகன ஓட்டிகள் பிடிப்பட்டுள்ளனர்.இவர்களிடம் 100 ருபாய் முதல் 500 வரை அபராதம் பெறப்பட்டுள்ளது.

இதனால் மதுரையில் ஹெல்மெட் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.

Leave a Response