சம்மர் சர்ப்ரைஸ் என்ற பெயரில் புதிய சலுகையை தனது வாடிக்கையாளர்களுக்கு ஜியோ அறிவித்துள்ளது!..

summer
ஜியோ நெட்வொர்க் கடந்த ஆறு மாதங்களாக இலவசமாக வழங்கி வந்த சேவைகள் மார்ச் 31-ந்தேதியுடன் நிறைவு பெறும் என தெரிவித்திருந்த நிலையில் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ‘சம்மர் சர்ப்ரைஸ்’ (Summer Surprise) என்ற புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜியோ பிரைம் திட்டத்தில் சேர்வதற்கான தேதி மார்ச் 31-ந்தேதியில் இருந்து ஏப்ரல் 15, 2017 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ரூ.303 ரீசார்ஜ் செய்து இலவச சேவைகளை ஜூலை மாத இறுதி வரை பெற முடியும்.

முன்னதாக ரூ.99 மதிப்புடைய பிரைம் மற்றும் ரூ.303 ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு ஜியோ சேவைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்ப்டடிருந்தது. புதிய அறிவிப்பை தொடர்ந்து ஜியோ வாடிக்கையாளர்கள் ஏப்ரல் 15-ந்தேதிக்குள் ரூ.99+ரூ.303 ரீசார்ஜ் செய்தால் மூன்று மாதங்களுக்கு இலவச சேவைகளை பயன்படுத்தலாம். இதற்கான அறிக்கையை ஜியோ நேற்று இரவு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தற்சமயம் வரை ஜியோ கட்டண சேவைகளை பயன்படுத்த 7.2 கோடி பேர் கட்டணம் செலுத்தியுள்ளதாக ஜியோ அறிவித்துள்ளது. மேலும் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஜியோ கட்டண சேவைகளுக்கு 10 கோடி பேர் வரை சேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோ இலவச சேவைகள் நிறைவு பெற இருப்பதை தொடர்ந்து, ஏப்ரல் 15-ந்தேதிக்கு பின் ஜியோ ரீசார்ஜ் செய்யாதவர்களின் சேவைகள் துண்டிக்கப்படும் என முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்ப்பிடப்பட்டுள்ளது.

Leave a Response