2 வயது குழந்தை பட்ட பகலில் கடத்தல்! தீவிர தேடலில் காவல் துறை!!!

siruvan
வீட்டின் எதிரே விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை பட்டப்பகலில் கடத்தப்பட்துள்ளான் இச்சம்பவம் அப்பக்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரகாஷ், முத்துலட்சுமி தம்பதியின் இரண்டு வயது மகன் சாய் தர்ஷன். பிரகாஷின் தாய்க்கு உடல் நிலை சரியில்லை என்பதால், நோய் தொற்று குழந்தைக்கும் ஏற்படும் என்று, தன் மனைவியின் வீட்டிற்கு சாய் தர்ஷனை அனுப்பி வைத்துள்ளார். கடந்த ஒரு வாரகாலமாக அத்திக்குளம் பகுதியில் உள்ள முத்துலட்சுமியின் அம்மா வீட்டில் இருந்து வந்துள்ளான். நேற்று அந்தப்பகுதியை சேர்ந்த குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த போது, பைக்கில் ஹெட்மெட் அணிந்து வந்த நபர் ஒருவர், குழந்தை சாய் தர்ஷனை கடத்திக்கொண்டு சென்றுவிட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அப்பகுதி மக்களிடமும், குழந்தையின் பாட்டியிடமும் தீவிர விசாரணை நடத்தினர். திருச்சி – திண்டுக்கல் சாலையில் குழந்தை கடத்தப்பட்டுள்ளது என்ற தகவல் அறிந்த காவல்துறையினர் சோதனை சாவடிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் ரோந்து வாகனங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோவை சோதனை செய்தபோது, குழந்தை கடத்தல் தொடர்பான வீடியோ எதுவும் பதிவாகவில்லை. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Response