தமிழக அரசு ஆவடி, தாம்பரம், பல்லாவரம் ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்பொழுது தமிழகத்தில் மொத்தம் 12 மாநகராட்சிகள் உள்ளன. சென்னை மாநகராட்சியில் மட்டும் 200 வார்டுகள் உள்ளன.
இந்த நிலையில் ஆவடி, தாம்பரம், பல்லாவரம் ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் சென்னையில் மாவட்ட நிர்வாகம் இதற்கான பரிந்துரையை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது. இந்த பரிந்துரை அரசின் பரிசீலனையில் உள்ளதால், விரைவில் இந்த மூன்று நகராட்சிகளும் மாநகராட்சிகளாக அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு மாநகராட்சிகளாக அறிவிக்கப்படும் போது, தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிக்கும்.
அதுமட்டுமின்றி, பேரூராட்சியாக இருக்கும் மாங்காடு, குன்றத்தூர் ஆகியவை கிளை நகராட்சிளாக மேம்படுத்தப்படவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.