தந்தைக்காக சமையல் கலை வல்லுனராகிறார் !..’சந்தானம்’.

santhanam
சமையல் கலை வல்லுனராக வரவேண்டும் என்று தனது தந்தையின் கனவை நனவாக்கி வைக்கிறார் நடிகர் சந்தானம்.பல ஹீரோக்களின் படங்களில் டயமிங் காமெடிகள் பேசி ரசிகர்களை சிரிக்க வைத்து வந்தவர் நடிகர் சந்தானம். ஆனால் ஹீரோவான பிறகு அவருக்கான பொறுப்பு அதிகரித்து விட்டது. அதனால் நடனம், சண்டை என முறையான பயிற்சி எடுத்து தனது பாடிலாங்குவேஜையும் மாற்றி ஒரு ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், தான் அதிகமாக காமெடி செய்வதை குறைத்து பர்பாமென்ஸில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் சந்தானம்.

அந்த வகையில், தற்போது அவர் நடித்து திரைக்கு வர தயார் நிலையில் இருக்கும் ‘சர்வர்சுந்தரம்’ படத்தில் தந்தையின் கனவை நனவாக்கும் மகனாக நடித்துள்ளாராம். அதாவது, சமையல்காரரான தந்தைக்கு பெரிய ஸ்டார் ஹோட்டலில் சமையல் செய்ய வேண்டும் என்பதுதான் ஆசையாம்.

ஆனால் அது நடைபெறாமல் போக, இஞ்சினியரிங் படித்த மகன் சந்தானத்தை, வெளிநாடு சென்று கேட்டரிங் படித்து வர வைத்து ஸ்டார் ஹோட்டலில் சமையல்காரராக சொல்வாராம். அதனால் தந்தையின் ஆசைக்காக வெளிநாடு சென்று கேட்டரிங் படித்து வந்து பெரிய ஹோட்டலில் சமையல் கலை வல்லுனராக சேர்ந்து சாதனை செய்கிறார் சந்தானம்….

Leave a Response