டி.டி.வி. தினகரன் டெபாசிட் கூட வாங்க போவதில்லை : பெரியசாமி!…

05THPERIYASAMY_GNA50UIE7.1+05THPERIYASAMY
ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் டி.டி.வி. தினகரன் டெபாசிட் கூட வாங்கபோவதில்லை என்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஊர்க்காலசாமி கோவில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு அன்னதானத்தை தி.மு.க. முன்னாள் அமைச்சர் பெரியசாமி தொடங்கி வைத்து அதன் பின்னர் நிருபர்களிடம் பேசினார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. இந்த தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட வில்லை. அ.தி.மு.க.வின் அணிகள்தான் போட்டியிடுகின்றன. இரட்டை இலை யாருக்கும் கிடைக்காது. சசிகலா அணியில் உள்ள டி.டி.வி. தினகரன் 3-ம் இடத்துக்கு தள்ளப்படுவதுடன் அவர் டெபாசிட் கூட வாங்க மாட்டார் என்று கூறினார்.

டி.டி.வி. தினகரன் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறி வருகிறார். அவர் சொல்வதை காகிதத்தில் எழுதி வைத்து அவரே பார்த்துக் கொள்ளட்டும். இந்த அரசு மீது மக்கள் நமபிக்கை இழந்து பல நாட்கள் ஆகி விட்டது.முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவரது நிகழ்ச்சியை கூட புறக்கணித்து வருகின்றனர். மக்கள் விரோத இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என தமிழகத்தின் ஒட்டு மொத்த மக்கள் நினைத்து வருகின்றனர். இதனை மறைக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தி.மு.க. மீது வீண் பழி சுமத்தி வருகிறார் என்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்…

Leave a Response