கள்ளநோட்டு கடத்தல் தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சென்னை துறைமுகத்தில் தொடர் சோதனை நடத்தி வருவது தெரியவந்துள்ளது. சென்னை துறைமுகத்தில் அதிகாரிகள் அதிரடி சோதனை செய்துவருகின்றனர். இதற்கு காரணம் கள்ள நோட்டு கடத்தலா? என்று மக்களிடையே பல்வேறு குழப்பத்தை ஏற்ப்படுத்தியுள்ளது..
வெளிநாட்டில் இருந்து கடல் மார்க்கமாக கோடிக்கணக்கில் கள்ள நோட்டுக்களும், பயங்கர ஆயுதங்களும் துறைமுகம் வழியாக கடத்தப்படுவதாக மத்திய புலனாய்வுத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து இந்தியாவிலுள்ள துறைமுகங்களில் கடந்த 18-ம் தேதி முதல் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
சென்னை துறைமுகத்தில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருவது மக்களிடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளது!கள்ள நோட்டுகள் கடத்தபடுவது என்று முற்று பெரும் என்று தெரியவில்லை..அரசு இதற்கு சரியான தீர்வை காணவேண்டும்..