பிஎஸ்என்எல் புதிய சலுகை! தினமும் 2ஜிபி டேட்டா !!!..

bs
ரூ.339 க்கு தினமும் 2ஜிபி டேட்டா என்று பிஎஸ்என்எல் புதிய சலுகையை வழங்கியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ போட்டியை சமாளிப்பதற்காக, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன. ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்களைத் தொடர்ந்து பிஎஸ்என்எல் நிறுவனமும் புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

பிஎஸ்என்எல் அறிவித்துள்ள புதிய சலுகையின்படி, 28 நாட்களுக்கு ரூ.339 க்கு தினமும் 2 ஜிபி கொண்ட 3ஜி டேட்டா சேவையை வழங்க உள்ளது. இந்த சலுகை 90 நாட்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. 3ஜி சேவை என்றாலும் நாள் ஒன்றிற்கு 2ஜிபி டேட்டா வழங்குவது தொலைத் தொடர்பு துறையில் மிகச் சிறந்த சலுகை என பிஎஸ்என்எல் நிறுவனம் கூறியுள்ளது.

தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு, தொலைப்பேசி அழைப்பின் முதல் 25 நிமிடங்களுக்கு கட்டணம் வசூலிப்பதில்லை. 25 நிமிடங்களுக்கு பிறகும் தொடரும் அழைப்புக்களுக்கு நிமிடத்திற்கு 25 காசுகள் என்ற வீதத்தில் கட்டணம் வசூலித்து வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் அளித்துள்ள இந்த சலுகை மக்களுக்கு பெரும் பயனுடையதாக திகழும் என எதிர்ப்பார்க்கபடுகிறது…

Leave a Response