ஆர்.கே.நகர் பா.ஜ.க, வேட்பாளராக இயக்குனர் கங்கை அமரன்!

gangai
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ., சார்பில் சசிகலா மீது நில அபகரிப்பு புகார் கூறிய, திரைப்பட இயக்குனர் கங்கை அமரன், போட்டியிடுகிறார்.

இதுகுறித்து, பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது:ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு, மாநில தலைவர் தமிழிசை, நடிகை கவுதமி மற்றும் கங்கை அமரன் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. சென்னையில், நேற்று நடந்த, மாநில தேர்தல் கமிட்டி கூட்டத்தில், கங்கை அமரனின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தன் பண்ணை வீட்டை, சசிகலா அபகரித்ததாக, பகிரங்கமாக புகார் கூறியவர் கங்கை அமரன். அதனால், அவரை வேட்பாளராக நிறுத்த, தமிழக பா.ஜ., முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

Leave a Response