பா.ஜ.க. வின் ஆர்.கே. நகர் தொகுதி வேட்பாளர் இன்று மாலை அறிவிப்பு!

Tamilisai-Soundararajan1
பாஜக தமிழக தலைவர் தமிழிசை அவர்கள் ஆர்கே நகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது குறித்து இன்று மாலை அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அதனையடுத்து, அவரது தொகுதியான ஆர்கே நகர் தொகுதி காலியானது. தொடர்ந்து, ஆர்கே நகர் தொகுதிக்கு வருகிற ஏப்ரல் மாதம் 12-ம் தேதியன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுதியில் களமிறங்கும் அதிமுக சசிகலா அணியின் வேட்பாளராக, அதிமுக-வின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல், திமுக சார்பில் மருதுகணேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் தான் போட்டியிடவுள்ளதாக ஜெயலலிதாவின் சகோதரர் மகளும், எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவையின் பொருளாளருமான தீபா ஏற்கனவே அறிவித்துள்ளார். அதிமுக பன்னீர்செல்வம் அணியின் சார்பில் களமிறங்கும் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், ஆர்கே நகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் என்பது குறித்து இன்று மாலை அறிவிக்கப்படும் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

Leave a Response