கால் இறுதியில் சானியா ஜோடி தோல்வி!!!..

sania_getty_630
பிஎன்பி பரிபாஸ் டென்னிஸ் தொடர் கால் இறுதியில் சானியா ஜோடி தோல்வியடைந்துள்ளது.பிஎன்பி பரிபாஸ் ஓபன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடர், ஸ்பெயின் ரபேல் நடால் ஆகியோர் 3-வது சுற்றில் வெற்றி பெற்றனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரும் 4-வது சுற்றில் தோல்வியடைந்தார். இரட்டையர் பிரிவு கால் இறுதியில் சானியா ஜோடி வெளியேறியது.

அமெரிக்காவின் கலிபோர்னி யாவில் உள்ள இந்தியன் வெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் 5-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் 6-3, 7-5 என்ற நேர் செட்டில் சகநாட்டை சேர்ந்த 26-ம் நிலை வீரரான பெர்னாண்டோ வெர்டஸ்கோவை வீழ்த்தினார்.

9-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் 7-6(7-3), 7-6(7-4) என்ற நேர் செட்டில் 24-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சனை தோற்கடித்தார். 4-வது சுற்றில் நடால்-பெடரர் பலப்பரீட்சை நடத்த உள்ளனர். 2-ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் 7-5, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் மார்ட்டின் டெல் போர்டோவை வீழ்த்தினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 3-6, 3-6 என்ற நேர் செட்டில் 14-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் எலினா வெஸ்னினாவை தோற்கடித்தார். மற்ற ஆட்டங்களில் ஸ்பெயினின் கார்பைன் முகுருசா, டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோர் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

Leave a Response