மரகதநாணயம் ஆதி நீண்ட இடைவேளைக்குப்பிறகு நடித்திருக்கும் படம் மரகதநாணயம். பல முக்கிய நடிகர்கள் நடித்திருக்கிறாகள்.
சூதுகவ்வும், முண்டாசுப்பட்டி கலந்த கலவையாக இந்தப்படம் உருவாகியிருக்கிறது. இயக்குனர் சரவணன் இயக்கியுள்ளார். முழுக்க காமெடித் திரில்லராக இந்தப்படம் உருவாகியுள்ளது. இந்தப்ப்டத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் இந்தப்படத்தில் என் கல்லூரித் தோழர்கள் 6 பணியாற்றியுள்ளனர். இது மனதுக்கு நெருக்கமான படம். இந்தப்படத்தின் இஅசையமைப்பாளர் திபு மிகப்பெரிய திறமைசாலி அவர் இந்தப்படம் மூலம் மிகப்பெரிய அளவில் வருவார்.நான் படம் பார்த்து விட்டேன். சூது கவ்வும் படத்திற்கு பிறகு ரொம்பவும் என்ஜாய் செய்த படம் என்று பேசினார்.
மேலும் விழாவில் பேசிய ஆனந்த்ராஜ் என்னை ஏன் காமெடியனாகிவிட்டீர்கள் என்று கேட்கிறார்கள். காலம் மாறிவிட்டது. ஈ, நாய் எல்லாம் வில்லனாகிவிட்டது. இப்போது பேய் தான் தமிழ் சினிமாவின் மெயின் வில்லன் நான் என்ன செய்வது. காமெடி தான் செய்ய முடியும் என்றார்.
விரைவில் வெளியீட்டுக்கு தயாராகிவருகிறது மரகதநாணயம்.