அஜித்தால் தாமதமானதா விழித்திரு படம் ?

vizhithiru-stills-photos-pictures-24
“விழுத்திரு” இயக்குநர் மீரா கதிரவனின் புதிய படம். அவள் பெயர் தமிழரசி படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இப்போது தயாரித்து இயக்கிய படம் தான் “விழித்திரு”.

சென்னையில் ஒரு இரவில் நடக்கும் நான்கு கதைகளை மையமாக கொண்ட படம். நான்கு வருட உழைப்பில் இந்தப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு, கிருஷ்ணா, விதார்த், தன்ஷிகா, தெய்வத்திருமகள் சாரா, அபிநயா என மிகப்பெரிய நடிகர் பட்டாளம் இப்படத்தில் நடித்திருக்கிறது.

இவ்வளவு நடிகர் பட்டாளத்தை இணைத்து நடிக்க வைக்க மிகுந்த கஷ்டப்பட்டதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் தெரிவித்தார்.

வீரம் படத்தில் நடிக்க வாய்ப்பு விதார்த்திற்கு வந்தபோது இயக்குநர் மீரா கதிரவன் அஜித்தின் படம் என்பதால் தனது கால்ஷீட்டை விட்டுக்கொடுத்திருக்கிறார். மீண்டும் எல்லா நடிகர்களை ஒருங்கிணைக்க 6 மாதங்களுக்கு மேல் தாமதம் ஆகிவிட்டதாம். முழுக்க இரவிலேயே எடுத்தது என இப்படி பல்வேறு காரணங்களால் இப்படம் தாமதம் ஆனதாக இயக்குநர் தெரிவித்தார்.

ஒருவன் அடுத்தவருக்கு நல்லதோ கெட்டதோ செய்யாதவரை மட்டுமே அவர்களுக்கு அந்நியனாக இருக்கிறான். இரண்டில் ஒன்றை செய்வதால் அவன் மற்றவர்கள் வாழ்வில் கலந்து விடுகிறான். இதை மையமாக வைத்து இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. வெகு விரைவில் இந்த்ப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

Leave a Response