நடிகை ரெஜினா கஸண்ட்ரா தமிழ், கன்னடம், தெலுங்குமொழிகளில் நடித்து வரும் பிரபல் நடிகை. தற்போது தமிழில் செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை, மற்றும் மாநகரம் படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் தற்போது ஒரு பேட்டியில் சினிமாவில் அட்ஜெஸ்மெண்ட் என்பது சகஜம் என்று சொல்லியுள்ளார்.
பாவனா கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விஷயத்தை பற்றி பேசும்போது இவ்வாறு அவர்கூறியுள்ளார்.
நான் சினிமாவில் நுழையும்போது அட்ஜெஸ்மெண்ட் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். அது செக்ஸ் அட்ஜஸ்மெண்ட் என்று தெரிந்த போது நான் மிகவும் அதிர்ச்சியுற்றேன். பல நடிகைகளே இதை சகஜமாக சொன்னார்கள். சினிமாவில் இப்படியான விசயங்கள் சகஜமாகிவிட்டது. அதை கடந்து சினிமாவில் இருப்பது மிகவும் கஷ்டம் என்று கூறியுள்ளார்.
சினிமாவைப் பற்றி பொது மக்களிடையே தவறான கருத்து நிலவி வரும் வேளையில் பிரபல நடிகை ஒருவரின் இந்த பேச்சு சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.