ஜெ. பிறந்த நாள் விழா, ஓ.பி.எஸ் அணியினர் மனு ….

O Panneerselvam TN CM
மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது போதிய பாதுகாப்பு கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்தவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

ஆ.இ.அ.தி.மு.க சார்பில் முன்னால் முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் அணியினர் ஒன்று சேர்ந்து சென்னை ஆர்.கே நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.இந்நிகழ்ச்சியில் ஓ.பன்னிர்செல்வம், மதுசூதனன் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ள இருகின்றனர்.

இந்நிலையில்,ஆர்.கே.நகரில் இன்று நடைபெற உள்ள நிகழ்ச்சிக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்ககோரி,ஓ.பன்னிர்செல்வம் அணியினர் உள்ள மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் சார்பில் அவரது வழக்கறிஞர் விஜயகுமார் சென்னை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

Leave a Response