ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியது, ‘நான் தமிழகத்தில் பிறக்கவில்லை என்றாலும், என்னை வாழ வைத்தது தமிழகமும், தமிழ் மக்களும் தான். நம் கலாச்சாரத்திற்காக இளைஞர்கள் போராடும் இந்த போராட்டம் அமைதியான முறையில் நடைபெறுவது பெருமைப்பட வைக்கிறது’ என்று நயன்தாரா கூறியுள்ளார்.