அலங்காநல்லூரில் இளைஞர்கள் மீது போலீஸ் தடியடி

C2RhdAFVEAE93gmஅலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி நடந்த அமைதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.

மேலும் அங்கு வேடிக்கை பார்க்க வந்த இளைஞர்களின் மீதும் போலீஸார் தடியடி நடத்தியுள்ளனர்.

போலீஸார் நடத்திய தடியடியில் பல இளைஞர்களின் கால் எலும்புகள் முறிந்தன. இச்செயல் மக்களிடத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸார் நடத்திய தடியடிக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Response