மதுரையில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் அமீர், ஆர்யா, யுவன் பங்கேற்பு

NTLRG_20170114180843581814மதுரை அவனியாபுரத்தில், ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வழங்கக் கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் இளைஞர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் இயக்குநர் அமீர், நடிகர் ஆர்யா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.

அமீர் இயக்கத்தில் ஆர்யா, சத்யா ஆகியோர் நடித்து வரும் ‘சந்தனத்தேவன்’ படத்தின் ‘ஜல்லிக்கட்டு’ படல் வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது. அதன் பின்னர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

சமூக வலைதளத்தில், ஜல்லிக்கட்டு என்றால் என்ன? என நடிகர் ஆர்யா போட்ட பதிவால், அவர் ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படுவதாக கருதப்பட்டு வந்தது. இந்தநிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்று தனது ஆதரவை ஆர்யா பதிவு செய்துள்ளார்.

Leave a Response