படம் ஓடுவதோ 3 நாட்கள் ஆனால் இசையமைக்கவோ 300 நாட்கள்! இசையமைப்பாளர்களை வறுத்தெடுத்த வைரமுத்து…

87bfe4b3-b11f-4ef0-804e-41fd4c06beeeஇயக்குனர் அமீர் புதியதாக தயாரித்து இயக்கவிருக்கும் திரைப்படம் ‘சந்தனத்தேவன்’. இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாகவும், அவருடைய தம்பி சத்யா மற்றும் அமீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களோடு ‘பட்டதாரி’ படத்தில் நடித்த அதிதி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் துவக்கவிழாவுக்கான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

விழாவின் முடிவாக இப்படத்தின் பாடலாசிரியர் வைரமுத்து உரையாற்றினார். அவர் பேசும்போது, அமீர் அவர்கள் இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் மாறிவிட்டார் என்று சொன்னார். அவர் இஸ்லாமிய மதத்திற்கு மாறியதை அமீர் குறிப்பிடவில்லை, யுவன் தன்னுடைய போக்கை மாற்றிகொண்டார் என தெரிவித்தார். அதாவது, சமீபத்தில் வெளிவந்த ‘தர்மதுரை’ திரைப்படத்திற்கு வைரமுத்து தான் பாடல்கள் எழுதினர், யுவன் சங்கர்ராஜா இசையமைத்தார். அவர் பேசுகையில், யுவன் சங்கர்ராஜாவிடம் இசை வருவது மிக தாமதமாகிறது என்று இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள் ‘தர்மதுரை’ உருவாகும்போது வைரமுத்துவிடம் வருத்தப்பட்டதாக குற்றம்சாட்டினார். அப்போது வைரமுத்து யுவனுக்கு போன் செய்து அறிவுரை கூறியதாக தெரிவித்தார். அதன் பின்னர் யுவன் தன்னை மாற்றிகொண்டதாக தெரிவித்தார்.

மேலும் வைரமுத்து பேசுகையில் தெரிவித்ததாவது, இளையராஜாவுடன் அவர் பணியாற்றும் போது, ‘காதல் ஓவியம்’ படத்திற்கு டியூன் போடுவதற்கு இளையராஜா ஒரு நாளும் வைரமுத்து பாடல்கள் எழுத இரு நாட்களும் ஆனது. ‘சிந்து பைரவி’ படத்திற்கு ஏழு நாட்களும், ‘முதல் மரியாதை’ படத்திற்கு ஐந்து நாட்களும் தான் டியூன் போடுவதற்கு எடுத்துகொண்டார் இளையராஜா. ஆனால் இப்போது படம் ஓடுவதோ மூன்று நாட்கள் தான், ஆனால் இசையமைக்கவோ முன்னூறு நாட்கள் எடுக்கின்றனர் இசையமைப்பாளர்கள் என்று இசையமைப்பாளர்களை வருத்தெடுத்தார் வைரமுத்து. வைரமுத்து பேசுவதை கண்டு யுவனால் மறுப்பு எதுவும் பேசமுடியாமல் புன்னகைக்க மட்டுமே முடிந்தது.

Leave a Response