த்ரிஷா எதிர்க்கும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் நடிகை சாந்தினி


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் த்ரிஷா ஜல்லிக்கட்டுக்கு எதிரான பீட்டாவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், வளர்ந்து வரும் நடிகையான சாந்தினி ஜல்லிக்கட்டுக்கு முழு ஆதரவளித்து குரல் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது,

“பொங்கல் என்றாலே நமக்கு முக்கியமாக நினைவில் வருவது ஜல்லிக்கட்டு தான். தமிழகத்தின் கலாச்சாரமான ஜல்லிக்கட்டு விளையாட்டை சில காரணங்களால் தடை செய்துள்ளார்கள். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க போராடிய அனைத்து இளைஞர்களுக்கும் நன்றி.

இளைஞர்களாக நம்முடைய கலாச்சாரத்தை நாம் தான் காப்பாற்ற வேண்டும். இந்த நேரத்தில் நாம் காப்பாற்றவில்லை என்றால் வருங்காலத்தில் நம் கலாச்சாரம் காணாமல் போய்விடும். ஜல்லிக்கட்டு மீதான தடையை தயவுசெய்து நீக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். நான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு அளிக்கிறேன்.” என சாந்தினி கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டை தடை செய்ய ஆதரிக்கும் த்ரிஷா போன்ற நடிகைகள் மத்தியில், ஜல்லிக்கட்டுக்கு முழு ஆதரவு அளிக்கும் சாந்தினி போன்ற வளரும் நடிகைகளுக்கு தமிழக மக்களும், திரைத்துறையினரும் வரவேற்ப்பு கொடுத்து ஊக்குவிக்கலாம்.

Leave a Response