இந்தியாவின் முதல் ‘பலின்றோம்’ பாடல் நாளை ரிலீஸ்…

img-20170106-wa0023
நடிகர் பிரபுதேவா மற்றும் ஐசரி கே.கணேஷ் இணைந்து பிரபுதேவா ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலமாக தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘விநோதன்’. இப்படத்தை விக்டர் ஜெயராஜ் இயக்குகிறார். படத்தின் நாயகனாக ஐசரி கே.கணேஷுன் சகோதரி மகன் வரணும், நாயகியாக வேதிகாவும் நடிக்கின்றனர். பாடல்களை மதன் கார்க்கி எழுத, டி.இமான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் சிங்கிள் டிராக் நாளை வெளியிடப்படுகிறது. இந்த பாடலின் அதிசயம் என்னவென்றால் அப்பாடல் ஆங்கிலத்தில் ‘பலின்றோம்'(PALINDROME) என்று சொல்லப்படுகிறது. அது என்னடா ‘பலின்றோம்’ என்று குழம்புகிறீர்களா? ‘பலின்றோம்’ என்றால் இருவழி ஒக்குஞ்சொல் . முன்பின் இருவழியும் ஒத்த எழுத்துக்கோப்புடைய செய்யுள் என்பது தான் இதன் ஸ்பெஷாலிட்டி. உதாரணத்திற்கு ‘MADAM, தாத்தா, விகடகவி, பாப்பா’ ஆகிய சொற்களை முன்பின் இருவழியும் ஓக்குஞ்சொல் கொண்டவை.

பாடலாசிரியர் மதன் கார்க்கி ஒரு பாடலை இந்த ‘பலின்றோம்’ முறையில் முழுவதுமாக எழுதியுள்ளார். மதன் கார்க்கி எழுதியுள்ள இப்பாடல் இந்தியாவின் முதல் ‘பலின்றோம்’ பாடல் என்ற சிறப்பை கொண்டது. நாளை வெளியாகவுள்ள இந்த ‘பலின்றோம்’ பாடல் நாளை முதல் ஆங்காங்கே ஒலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Response