நயன்தாராவின் படத்தை தயாரிக்கும் ‘ஈராஸ் நிறுவனம்’

cjep-wiueaatiklதமிழ் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. அவர் தற்போது டோரா, அறம், கொலையுதிர் காலம், இமைக்கா நொடிகள் என பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்தப்படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஒரு த்ரில்லர் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை புதுமுக இயக்குனர் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கவுள்ளார்.

சர்வேதச அளவில்  தயாரிப்பு மற்றும் விநியோக துறையில் கொடி கட்டி பறக்கும் ‘ஈராஸ் சவுத்’  நிறுவனம், தற்போது நயன்தாரா நடிக்கும் இப்படத்தை தயாரிக்கிறது. இதன் மூலம் தென் இந்திய திரையுலகில் இன்னும் ஆழமாக கால் பதித்து இருக்கிறது ‘ஈராஸ் சவுத்’.

இது பற்றி ‘ஈராஸ் சவுத்’ நிறுவனத்தின் தலைவர் சாகர் சத்வானி கூறுகையில்,

“நயன்தாரா உடன் இணைந்து பணியாற்றும் இந்த திரைப்படத்தை பற்றி அறிவிப்பதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. இன்னும் தலைப்பிடப்படாத இந்த படத்தின் கதையை அறிமுக இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரி நயன்தாராவிடம் கூறிய அடுத்த கனமே, இதில் நடிக்க நயன்தாரா  சம்மதம் தெரிவித்து விட்டார். கதை களங்களையும், கதாபாத்திரங்களையும் மிக கவனமாக ஆராய்ந்து, அதன் பின் தேர்ந்தெடுப்பவர் நயன்தாரா என்பது ஒட்டுமொத்த திரையுலகிற்கும் நன்றாக தெரியும்.

நயன்தாராவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது  எங்கள் ஈராஸ் நிறுவனத்தின் எண்ணம். அந்த வகையில் அவர் நடிக்கும் படத்தை தயாரிப்பது, எங்களுக்கு அளவுகடந்த மகிழ்ச்சி. பிரமிக்க வைக்கும் ஒரு திரைப்படத்தை  உருவாக்க நாங்கள் அனைவரும்   தற்போது இணைந்து பணியாற்ற இருக்கிறோம்.   இந்த படத்தில்  பிரபல ஒளிப்பதிவாளர் செழியன் பணியாற்றுகிறார். மற்ற நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களை பற்றிய விவரங்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும்.   வருகின்ற  மார்ச் மாதத்தில் இருந்து எங்களின் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறோம்.” என்று கூறியுள்ளார்.

Leave a Response