முச்சதம் எடுத்து கருண் நாயர் சாதனை!

19-1482146615-karun-nair45

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கருண் நாயர் முச்சதம் எடுத்து சாதனை செய்துள்ளார்.  இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 759 ரன்களுடன் டிக்ளேர் செய்துள்ளது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டைச் சதம் அடித்திருந்த கருண் நாயர். தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். ரன் குவிக்கும் இயந்திரம் போல் செயல்பட்ட அவர் இரட்டைச்சதத்தை, முச்சதமாக மாற்றி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். கருண் நாயர் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் விரட்டியடித்து ரன்களை சேர்த்தார். அவரைக் கட்டுப்படுத்த முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் விழிபிதுங்கி நின்றனர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய கருண் நாயர் தமது மூன்றாவது டெஸ்ட்டிலேயே முச்சதம் விளாசி சென்னை ரசிகர்களைக் கவர்ந்தார்.

381 பந்துகளில் முச்சதத்தைக் கடந்து சாதனை செய்தார் கருண் நாயர். முதல் சதத்தையே முச்சதமாக சதமாக மாற்றி தனது திறமையை முழுவதுமாக வெளிப்படுத்தியுள்ளார்.

கருண் நாயர் முச்சதம் அடித்தவுடன் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 759 ரன்களுடன் தனது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்துள்ளது. இதனால் இந்திய அணி, 282 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.


 

Leave a Response