தில்லியில் நாளை பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்


panneer-story_647_052215085542முதல்வர் பன்னீர் செல்வம் தில்லியில் பிரதமர் மோடியை நாளை சந்திக்க உள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் துறை செயலாளர் ஆகியோருடன் முதல்வர் ஒ. பன்னீர் செல்வம் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: –

நடாளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவுக்கு சிலை வைக்க கோரிக்கை வைக்கவும், அவருக்கு பாரதரத்னா விருது வழங்கவும், வர்தா புயல் நிவாரண நிதி வழங்க பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கோரிக்கை கடிதங்களை பிரதமரிடம் நேரில் சந்தித்து முதல்வர் கொடுக்க உள்ளார்.


 

Leave a Response