ஏமனில் தற்கொலைப்படை தாக்குதல்: 30 வீரர்கள் பலி


_91739806__91632779_3084e4f3-c8ae-4d34-8b23-287eaee14e12ஏமனில், தற்கொலைபடை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் குறைந்தது 30 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.

வளைகுடா பகுதியில் அமைந்துள்ள ஏமன் நாட்டின் தென்பகுதியில் பிரபல துறைமுக நகரமான ஏடென் என்ற நகரம் ஒன்றுள்ளது, இந்நகரில் வடகிழக்கில் உள்ள கோர் மக்ஸார் மாவட்ட ராணுவ தலைமையகத்தில் இன்று சம்பளம் வாங்குவதற்காக பல வீரர்கள் ஒன்று கூடியிருந்தனர்.

அப்போது, தனது உடலில் வெடிகுண்டுகளை கட்டி வந்த பயங்கரவாதி அதனை வெடிக்க வைத்ததாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சுவதாகவும் மருத்துவ அதிகாரி கூறினார். தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்றதாக தகவல் ஏதுமில்லை.


 

Leave a Response