சேகர் ரெட்டியிடம் கோடிக்கணக்கில் பணமும் கிலோ கணக்கில் தங்கமும் பறிமுதல்


j_sekharசென்னையில் நேற்று முன்தினம் சேகர் ரெட்டி, ஸ்ரீனிவாசன், பிரேம் ரெட்டி வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடந்தது.

அதில், ரூ.106 கோடி கணக்கில் காட்டப்படாத பணம் சிக்கியது. அதில், ரூ.70 கோடி புதிய 2000 ரூபாய் நோட்டுகளாக இருந்தது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 127 கிலோ தங்கங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து, நேற்று 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில் ரூ.32 கோடி பணம் மற்றும் 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் மொத்தமாக ரூ.138 கோடி பணமும், 157 கிலோ தங்கமும் சேகர் ரெட்டியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தவிர வெவ்வேறு வங்கிகளில் ரூ.500 கோடி அளவுக்கு முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளது.

இவை அனைத்தும் தன்னுடையதுதான் என சேகர் ரெட்டி ஒப்புக் கொண்டுள்ளார். சமீபகாலமாக இவ்வளவு பெரிய தொகை கைப்பற்றப்படவில்லை. அவருக்கு எப்படி புதிய ரூபாய் நோட்டுகள் கிடைத்தது என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறோம் என அதிகாரிகள் கூறினர்.


 

Leave a Response