கிறிஸ்துமஸ் விருந்தாக பலே வெள்ளையத்தேவா

balle-vellaiya-thevaa-movie-poster-2கிடாரி பட த்திற்குப் பிறகு சசிகுமார் நடித்திருக்கும் படம் பலே வெள்ளயத்தேவா. இப்படத்தில் கோவை சரளா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தன்யா கதாநாயகியாக நடித்திருக்கிறார். சசிகுமாரின் அம்மாவாக நடிகை ரோகினியும், தாத்தாவாக சங்கிலி முருகனும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை பி.சோலை பிராகாஷ் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் மதுரையில் குடியேறும் வெளியூர் இளைஞனாக நடிக்கிறார். பாட்டி தாத்தாவுடன் குடியேறும் சசிகுமாருக்கு தன்யாவுடன் காதல் ஏற்படிகிறது. கூடவே ஊரில் உள்ளவர்களுடன் மோதலும் ஏற்படிகிறது. பாட்டி கோவை சரளா உதவியுடன் பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை.

இப்படத்தை குறுகிய காலத்தில் எடுத்து முடித்துள்ளனர். வரும் கிறிஸ்துமஸ் (25ம் தேதி) அன்று இப்படம் திரைக்கு வருகிறது. இதுகுறித்து சசிகுமார் கூறியது : ’படத்தின் ஸ்கிரிப்ட் பக்காவாக இருந்ததால் 50 நாட்களிலேயே படப்பிடிப்பை முடித்து விட்டோம். தேனி, மதுரையில் படப்பிடிப்புகள் நடந்துள்ளது. இந்தப் படம் காமெடி, காதல், ஆக்‌ஷன் கலந்து உருவகியுள்ளது’ என்றார்.

Leave a Response