சசிகலாவுடன் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை


ops-skஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் வீட்டில் அவரது தோழி சசிகலா  தற்போது வசித்து வருகிறார்.

அவரை சந்திப்பதற்க்காக நேற்று மதியம் அமைச்சர்கள் சரோஜா, ராஜலட்சுமி, வளர்மதி, வீரமணி, காமராஜ் உள்ளிட்ட சில அமைச்சர்கள் வந்து சென்றனர்.

இன்று காலை 11.30 மணியளவில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் போயஸ் கார்டன் சென்றார். அவருடன் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, வீரமணி, மணிகண்டன் உள்பட முக்கிய அமைச்சர்களும் சென்றிருந்தனர்.

முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் போயஸ் கார்டனில் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

கட்சியின் பொதுச் செயலாளர் பதவி காலியாக உள்ளதால் அது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் பேசியிருபார்களா? அல்லது வேறு முக்கிய பிரச்சினை குறித்து பேசியிருபார்களா? என்று தெரியவில்லை.

இதற்கிடையே சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகளும் போயஸ் கார்டனுக்கு சென்று வந்தனர்.


 

Leave a Response