ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நடிகர் அஜித் அஞ்சலி


ajith_ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடிகர் அஜித் தனது குடும்பத்தினருடன் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு 11.30 மணியளவில் காலமானார். இவரது உடலுக்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அதிகாலை முதலே பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் ராஜாஜி அரங்கில் குவிந்துள்ளனர்.

மாலை 6.00 மணிக்கு, அவரது உடல் மெரினா கடற்கரையில் இருக்கும் எம்.ஜி.ஆர் சமாதி அருகே அரசு மரியாதையுடன் குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்கள் 2-ஆவது நாளாக இன்றும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே, வெளிநாட்டிலிருந்து நள்ளிரவில் சென்னை திரும்பிய நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்தினருடன் நள்ளிரவிலேயே மெரினா சென்று ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


 

Leave a Response