சென்னை மாநகராட்சி ஜெயலலிதாவிற்கு இறப்பு சான்றிதழ் வழங்குகிறது


jeya-death-certதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்றிரவு 11.30 மணியளவில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து அவருக்கு சென்னை மாநகராட்சி இணையத்தில் இறப்பு சான்றிதழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், அவரது குடும்ப விவரங்கள் மற்றும் இறந்த நேரம் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சான்றிதழை இன்று வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை 4.30 மணியளவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிட வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.


 

Leave a Response