ஜெயலலிதா மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் ; படப்பிடிப்புகள் ரத்து


radhika_vishal_091015tமருத்துவமனையில் நேற்று இரவு 11.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டார் என அப்பல்லோ நிர்வாகம் அறிவித்தது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் அறிவித்துள்ளது. கலைத்தாயின் மகளுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது என்று அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவையொட்டி தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சிகளின் படப்பிடிப்புகள் அனைத்தும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.


 

Leave a Response