எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை நல்லடக்கம்


Sasikala Natarajan, Jayaram Jayalalithaaதமிழக முதல்வர் ஜெயலலிதா (68) உடல் நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்றிரவு 11.30 காலமானார். இன்று மாலை, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

முதல்வர் மறைவை அடுத்து தமிழகத்தில் ஏழு நாள் அரசு முறை துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. அவரது உடல் சென்னை ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் , அரசியல் தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இன்று மாலை 4.30 மணி அளவில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில், ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.


 

Leave a Response