நடிப்பதை நிறுத்த சொன்னதால் திருமணம் நின்றது ; திரிஷா


trisha-61தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. திரையுலகில் கொடி கட்டி பறந்தபோது இவருக்கும் சென்னையைச் சேர்ந்த வருண்மணியன் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் திருமணம் நடக்கும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் திடீரென திரிஷா திருமணம் நின்று போனது. அதற்கான காரணம் பற்றி திரிஷாவோ, வருண் மணியன் தரப்பினரோ எதுவும் கூறவில்லை. திருமணம் நின்றதற்கான காரணம் பற்றி பல்வேறு தகவல்கள் பரவி வந்தது.

இந்தநிலையில் திரிஷா நடித்த தர்மயோகி படம் குறித்து நிருபர்கள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட திரிஷா பேசும்போது கடந்த 2 ஆண்டுகளாக கடுமையாக பாடுபட்டு இந்த வெற்றியை பெற்றுள்ளேன். சினிமாவை தவிர என் வாழ்க்கையில் வேறு எந்த திட்டமும் இல்லை. வெற்றியோ, தோல்வியோ சினிமாவில் தான் இருப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது இடைமறித்த நிருபர்கள் திருமணத்துக்கு பிறகு சினிமாவில் தொடர்வீர்களா? என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த திரிஷா எனது திருமணம் நின்று போன காரணமே அது தான் என்றார். என்னை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டவர் நடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியதால் தான் என் திருமணம் நின்று போனது. நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க சொன்னதால் திருமணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டேன். தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன். நான் கருவுற்றால் மட்டும் பிரசவத்துக்கான நாட்களில் நடிக்காமல் இருப்பேன். பிரசவம் முடிந்ததும் மீண்டும் நடிக்கத் தொடங்குவேன்.

கதாநாயகி வேடங்கள் கிடைக்காவிட்டால் எனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பேன். இறுதி மூச்சு உள்ளவரை திரையுலகில் இருப்பேன் என்று அவர் கூறினார்.


 

Leave a Response