‘கிசுகிசுகளை நடிப்பால் வெல்ல முடியும்’ நடிகை தமன்னா


tamannaah-bhatia-wallpaper-cool-images-48516xbqnk‘‘சினிமாவில் ஒழுக்கமாக இருந்தால் கிசுகிசுக்கள் வராது’’ என்று நடிகை தமன்னா கூறினார்.

நடிகை தமன்னா இதுகுறித்து அளித்த பேட்டியில் :–

‘‘நடிகர்–நடிகைகள் வாழ்க்கை வித்தியாசமானது. அவர்களின் நடவடிக்கைகள் ரசிகர்களால் உற்று நோக்கப்படுகிறது. நடிகர்களின் நடை, உடை பாவனைகள், சாப்பிடும் உணவு வகைகள், பழக்க வழக்கங்கள், விருப்பங்கள், என்ன பேசுகிறார்கள் என்று அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ள ஆர்வப்படுகிறார்கள்.

இதனால்தான் அவர்களை பற்றி அதிகமாக கிசுகிசுக்கள் வருகின்றன. இதைப் பார்த்து சில நடிகைகள் உடைந்து போகிறார்கள். அவர்களுக்கும் குடும்பங்கள் இருக்கிறது. அவர்கள் என்ன நினைப்பார்களோ என்று வேதனைப்படுகிறார்கள். நாள்பட அது பழக்கமாகிப்போகிறது. சில நடிகைகள் கிசுகிசுக்கள் பற்றி கண்டு கொள்வது இல்லை. இதுபோன்ற கிசுகிசுக்களை நடிப்பால் வெல்ல முடியும் என்பது எனது கருத்து.

திறமையாக நடித்தால் அதுதான் மக்கள் மனதில் நிற்கும். சிறந்த நடிகை என்ற பெயர் எடுப்பது மட்டுமே கடைசி வரை நம் கூட வரும். அப்போது கிசுகிசுக்களை மறந்து விடுவார்கள். அத்துடன் சினிமாவில் ஒழுக்கம் முக்கியம். வேலைகளில் அர்ப்பணிப்பும் வேண்டும். ஒழுக்கம், தொழிலில் ஈடுபாடு போன்றவை இருந்தால் கிசுகிசுக்கள் பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை. அவர்களை பற்றி கிசுகிசுக்களும் குறைந்து விடும்.

எனக்கு ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் அமைந்தது. கதை தேர்விலும் கவனமாக இருக்கிறேன். பாகுபலி படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் பதிந்து விட்டது. தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க விருப்பமாக இருக்கிறேன்.’’

இவ்வாறு தமன்னா கூறினார்.


 

Leave a Response