சமந்தா திருமணத்திற்குப் பிறகு நடிப்பாரா?


1466323746-169நாகசைதன்யா-சமந்தா இருவருக்கும் இந்த வருடம் கடைசியிலோ அல்லது அடுத்த வருடம் திருமணம் வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்நிலையில் சமந்தாவின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதே அவர் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டதாக கூறப்படும் நிலையில் திருமணத்திற்கு பின்னர் அவர் தொடர்ந்து நடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது

இதுகுறித்து கருத்து கூறியுள்ள நாக சைதன்யா, ‘திருமணத்திற்கு பின்னர் நடிப்பதா? வேண்டாமா? என்பது சமந்தாவின் சொந்த விருப்பம். அதில் நான் தலையிட மாட்டேன். திரையுலகில் அவருடைய தற்போதைய நிலையை பார்த்து பெருமைப்படுபவன் நான். திருமணத்திற்கு பின்னர் நடிப்பது என்று சமந்தா முடிவெடுத்தால் நானோ அல்லது எனது குடும்பத்தினர்களோ கண்டிப்பாக தலையிட மாட்டோம்’ என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே சிவகார்த்திகேயனுடன் நடிக்க சமந்தா சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் திருமணத்திற்கு பின்னர் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 

Leave a Response