சிமி இயக்கத்தை சேர்ந்த 8 பயங்கரவாதிகள் இன்று போபால் மத்திய சிறையில் பாதுகாவலரை கொன்று விட்டுத் தப்பி ஓடினார்கள். அதிகாலை 2-3 மணியளவில் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலரை ஸ்டீல் பிளேட்டால் கழுத்தில் வெட்டி கொலை செய்தனர்.
இதைத்தொடரந்து அவர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த போர்வையை பயன்படுத்தி சிறைச்சாலையின் சுற்றுச்சுவரில் ஏறி குதித்து தப்பி ஓடினர். தப்பி ஓடிய சிமி இயக்கத்தினரை தேடும் பணியில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை.