பாக்தாத் நகரில் தற்கொலைப்படை தாக்குதல்; 4 பேர் பலி


 ஈராக் தலைநகர் பாக்தாத்தின் இஸ்கான் பகுதியில் வாழ்கின்றனர். அங்கு அவர்கள் ஒரு கூடாரம் அமைத்து, புனித நகரமான கர்பாலாவுக்கு யாத்திரை மேற்கொள்கிறவர்களுக்கு உணவுப்பொருட்களையும், பானங்களையும் நேற்று முன்தினம் வழங்கி கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் உள்ளே புகுந்து, குண்டுகளை வெடிக்கச்செய்தார். பெரிய சத்தத்துடன் குண்டுகள் வெடித்து கரும்புகை மண்டலம் உருவானது. அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினார்கள்.

இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்த மீட்புப்படையினர் விரைந்து வந்து முழுவீச்சில் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

இந்த தாக்குதலில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 16 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.  இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


 

Leave a Response